Posts

Showing posts from April, 2019

உங்கள் மூளை எந்த பக்கம் வேலை செய்கிறது தெரியுமா?

Image
ஆல்பர்ட் ஏய்ன்ஸ்டீன் மூளையை முழுவதுமாக பயன்படுத்தியதால் உலகம் போற்றும் விஞ்ஞானியானர். ஆனால் நாமோ மூலையில் 10 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துவதால் பன்றி மேய்க்கிறோம் என சிலர் கூற நாம் கேள்விபட்டிருப்போம். இது உண்மைதானா என்றால் நிச்சயம் உண்மை இல்லை. மதியை பயன்படுத்தாமல் விதியே என இருப்போரை சிந்திக்க தூண்டுவதற்காக இத்தகைய ஒரு கூற்று ஊக்கமூட்டம் பேச்சாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.    மனித மூளை அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது மற்றும் இயங்குகிறது. ஆனால் மூளையின் எதோ ஒரு மூலையில் இருக்கும் கூர் மதியை சரியாக பயன்படுத்தி கொள்ளும் போது மட்டுமே சிலர் புத்திசாலிகள் எனவும், மற்றவர்களை மக்குகள் எனவும் வகைபடுத்த படுகின்றன. எண்ணிலடங்கா தகவல்களையும், நினைவுகளையும் போதித்து வைக்க உதவும் மூளையானது நம் உணர்சிகளின் மையமாகவும், உடல் இயக்கங்களை கட்டுபடுத்தும் தலைக்குள் இருக்கும் தலைமை செயலகமாகவும் இருகின்றது. நமது மூளை இரு அரை கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மூளையின் இரு அரை கோளங்களையும், ஒரு நரம்பு கற்றை இணைகிறது. அதனை CORPUS CALLOSUM என அழைகின்றனர்.    மூளையின் ஓ...

சிப்பிக்குள் முத்து எப்படி உருவாகுகிறது தெரியுமா?

Image
தங்க நகை என்ற உடன் ஒரு பெண்ணின் முகம் பொன் முகம் போல் ஆகும். அதிலும் தங்க நகைகளில் வைரம், மாணிக்கம், பவளம், முத்து உள்ளிட்ட அலங்கார பொருட்கள் பதிக்கப்பட்ட நகைகளை விரும்பாதவர்ளே இல்லை என்று கூறலாம். குறிப்பாக நெக் லெஸ், காதணிகள் உள்ளிட்ட அணிகலன்களை வாங்குவோர் முத்து பதிக்கப்பட்ட நகைகளுக்கு முதலிடம் கொடுத்து வாங்கி மகிழ்வர் ஏனெனில் பிற அலங்கார கற்கள் பதித்த நகைகளை விட முத்து பதித்த நகைகளின் விலை சற்று குறைவுதான்.    அதே நேரத்தில் சிரிக்கும் பருவ மங்கையின் பற்களை போல, முத்துகளின் வெள்ளை நிறம் நகைகளுக்கு கூடுதல் அழகையும் பொலிவையும் கொடுக்கும். தங்க நகைகள் விரும்பாத நங்கைகள் கூட முத்துகளால் ஆன நகைகளை அணிய விரும்புவார்கள். இயற்கையான இந்த முத்துகள் கடல் வாழ் உயிரினமான சிப்பிகளில் இருந்து கிடைகிறது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் சிப்பிகள் அழகிய முத்துகளை ஏன் உருவாக்குகின்றன என்பது பலருக்கும் தெரியாது.    தனது உடலுக்குள் புகுந்துவிடும் அந்நிய பொருட்களில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள சிப்பியின் உடலுக்குள் நடக்கும் ஒரு உயிரியல் செயல் முறையின் விளைவ...

ராகெட் ஏன் செங்குத்தாக ஏவப்படுகிறது

Image
ராக்கெட்டுகள் செலுத்தபடுவதை நாம் பலமுறை தொலைகாட்சிகளில் பார்த்திருக்கலாம். ஏவுதளத்தில் செங்குத்தாக நிறுத்தப்பட்டு இருக்கும். செலுத்துவதற்கான COUNTDOWN முடிந்ததும் தீபிலம்புடன் ஏராளமான புகையை கக்கிக்கொண்டு செங்குத்தாக மேல் எழும்பி விண்வெளியை நோக்கி புறப்பட்டு செல்லும். ராக்கெட்டுகள் ஏன் செங்குத்தாக ஏவப்படுகின்றன. அதே போல் மனிதர்களை தாங்கி செல்லும் விண்கலங்களும் ராகெட்டுடன் இணைத்து செங்குத்தாகவே ஏவபடுகின்றன. விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் விண்கலங்கள் விமானம் போலவே RUN WAY  யில் தரை இறங்கும் போது, விண்வெளிக்கு செத்தபடும் போது மட்டும் ஏன் செங்குத்தாக செலுத்தப்டுகின்றன என்பதை பற்றி தெரியுமா?    ராக்கெட் என்பது விண்வெளிக்கு, செயற்கைக்கோள்கள், மனிதரை தாங்கி செல்லும் விண்கலங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை எடுத்து செல்ல உதவும் ஓர் ஏவு ஊர்தி ஆகும். ராக்கெட்டுகள் விமானங்களை போல ஏரோ டைனமிக்ஸ் எனப்படும் காற்றியக்கவியலின் அடிப்படையில் பறப்பதில்லை, மாறாக ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு என கூறும் நியுட்டனின் மூன்ற...

மனிதனை போல் விவசாயம் செய்யும் இன்னொரு உயிரினம்

Image
டைனோசர்கள் பூமியில் இருந்து அழிந்து 6 கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதற்கு முன்பே பூமியில் தோன்றி இன்று வரை நம்மிடம் வாழும் உயிரினம் எறும்புகள் தான். கிட்டத்தட்ட 13 கோடி ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருகின்றன. எறும்புகளில் 10,000 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. வெப்பமான பகுதிகளில் இவை கூட்டம் கூட்டமாக வாழும் தம்மை கொண்டவை. எறும்புகள் பொதுவாக 45 முதல் 60 நாட்கள் வரை உயிர் வாழக்கூடியது. இதிலும் கருப்பு பெண் எறும்பு என்ற இனவகை எறும்புகள் 15 ஆண்டுகள் வரை உயிர்வாழும் என்று ப்ரிடானியா ஆய்வு தெரிவிக்கின்றது.    இதன் கால்கள் மிக மிக வலுவானவை மிக வேகமாக இயங்க கூடியவை. ஒரு மனிதன் ஓடக்கூடிய வேகத்தில் இது ஓட கூடியது. அதன் உருவத்தோடு ஒப்பிடும்போது இது அதிபயங்கரமான மின்னல் வேகம். அதே போல தனது எடையை போல் 20 மடங்கு கூடுதலான எடையை அசால்டாக தூக்கி செல்ல கூடியது. இதனோடு மனிதனை ஒப்பிடால், 50 கிலோ எடை கொண்ட ஒரு மனிதன் 1000 கிலோ எடையை தூக்கி கொண்டு ஓட வேண்டும். இது சாத்தியம் இல்லாத ஓன்று.    எறும்புகள் 6 வண்ணங்களில் காணபடுகின்றது. பச்சை, சிவப்பு, பழுப்பு, மஞ்சள், நீளம், மற்றும் ...

மரண வாக்குமூலம் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்படும்

Image
பல வழக்குகளின் போக்கையே திசை திருப்பி விடும் சக்தி மரண வாக்கு மூலத்துக்கு உள்ளது. இந்திய சான்று சட்டம் 1872 பிரிவு 32ன் படி, மரண வாக்கு மூலத்தை ஏற்று கொள்ள கூடிய வாக்கு மூலமாக கருதலாம் என்று சட்டம் சொல்கிறது.    ஒருவர் இறக்கும் போதோ, இறப்பை எதிர்பார்த்து இருக்கும் போதோ, கொடுக்கும் வாக்கு மூலமே மரண வாக்குமூலம். தனது இறப்புக்கு யார் காரணம், எப்படி தாக்கினார்கள், என்ன ஆயுதம் பயன்படுத்தினார்கள் என்று இதில் விளக்கமாக கூறுவார்கள். இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவர், தனது வாக்கு மூலத்தை, மருத்துவமனையில் கொடுக்கலாம். அல்லது தாக்கப்பட்ட இடத்திலேயே கூட கொடுக்கலாம். எங்கு மரண வாக்குமூலம் கொடுத்தாலும் செல்லுபடியாகும். யார் தூண்டுதலும் இல்லாமல் தானே முன்வந்து கொடுப்பது தான் மரண வாக்குமூலம்.    சிகிச்சை அளிக்கும் மருத்துவர், காவல் துறை அதிகாரி, குற்றவியல் முன்னிலையில் கொடுக்கலாம். வாக்குமூலம் கொடுக்கும் நபரின் உயிர் நீடிக்கும் என்றால், காவல் துறையினர், குற்றவியல் நடுவரை அழைத்து வந்து வாக்குமூலம் பதிவு செய்வார்கள். தாசில்தார் கூட மரண வாக்குமூலத்தை பதிவு செய்யலாம். சி...

நிச்சயதார்த்த மாத்திரை பற்றி தெரியுமா ?

Image
நிச்சயதார்த்த மாத்திரை என்று சொன்னதும் பலருக்கும், இது ஆண்மைக்கான சமாசாரம் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இது பெண்களுக்கான ஓன்று. பெண்களுக்கு மட்டும் அல்ல, வருங்களால சந்ததிகளுக்கு கூட என்று சொல்லலாம். நமது நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 3 சதவீத குழந்தைகள் பிறவி குறைபாட்டுடன் பிறக்கிறது. மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, மூலையில் நீர் கோர்ப்பது. குடல் வெளியில் இருப்பது, சிறுநீரகங்கள் இல்லாமல் பிறப்பது, கை கால் எலும்புகள் வளராமல் இருப்பது இப்படி பட்ட குழந்தைகள் நீண்ட நாட்கள் உயிருடன் வாழமுடியாது.    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற அதி நவீன மருத்துவ கருவிகள் கூட 70 சதவீத குறைகளை மட்டுமே கண்டுபிடிக்க உதவுகின்றன. மீதி 30 சதவீத குறைகளை கண்டுபிடிக்க முடியாது. காது கேளாமல் இருப்பது போன்ற பிறவி கோளாறுகள் வளர வளர தான் தெரியும். ஸ்கேன் மூலம் உயிரை பாதிக்கும் பிரச்சனைகள் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.    பிறவி கோளாறு எப்படி வருகின்றது என்றால், மரபு ரீதியிலான மற்றும் சுற்று சூழல் என்ற ஏராளமான காரணங்களை மருத்துவம் சொன்னாலும், மனக் கோளாறு, முதுகுத்தண்டு பிரச்சனைகளுடன் ...

அடுத்த 100 ஆண்டுகளில் தமிழ் மொழி அழியும்

Image
அடுத்த 100 ஆண்டுகளில் தமிழ் மொழி அழியும் என்ற தலைப்பு பலரையும் அதிர்ச்சிக்குளாயிருக்கலாம். ஆனால் நமது தமிழ் மொழியின் நிலைமை இப்படி தான் உள்ளது. ஆங்கில மொழி வந்த பிறகு, அதனின் தாக்கம் உலகம் முழுவதும் ஊடுருவி, ஆங்கில மொழி உலக பொது மொழியாக்கி பிறகு இதுவரை 247 மொழிகள் அழிந்து இருக்கின்றன.    ஆங்கில மொழி அத்தனை சக்தி படைத்ததா இருக்கு. தமிழ் மொழியும் இப்படி அழிவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக ஆய்வுகளில் கூறுகின்றன. உதாரணமா, ஒரு நாளைக்கு நாம் பேசும் தமிழ் மொழியில் நமக்கே தெரியாமல் எத்தனை ஆங்கில சொற்கள் தமிழோடு கலந்து பேசுகிறோம் என்று தெரியுமா?. இப்படி தான் ஒவ்வொரு மொழியிலும் ஆங்கிலம் ஊடுருவி இருக்கு. இன்னும் 50 ஆண்டுகளில் முழுமையா ஆங்கிலம் ஊடுருவிடும். காரணம் இன்றைய தமிழர்கள் ஆங்கில மோகத்தில் தான் இருக்கிறார்கள். தமிழர்கள் தமிழ் மொழி மீது அக்கறை காட்டுவது இல்லை. தங்கள் குழந்தைகளை கூட ஆங்கில வழி கல்வியில் தான் சேர்க்கின்றனர். ஆங்கிலத்தில் பேசுவதை தான் பெருமையாகவும் கருதுகிறார்கள்.    இந்த நிலை நீடித்தால் இன்னும் 50 ஆண்டுகளில் முழுமையாக ஆங்கிலம் தமிழில் ஊடுரு...

காலனி நாட்டுக்காக உடலை கொடுத்த பெண்கள்

Image
மனித இனத்தின் புனிதம் என்று சொல்லப்படும் பெண்களுக்கு தான் எத்தனை துன்பங்கள். இன்றைக்கு வேண்டுமென்றால் பெண்கள் சம உரிமை பெற்று இருக்கலாம். ஆனால் சரித்திர காலங்களில், பெண்கள் விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு ஒரு உதாரணம் தான் COMFORT பெண்கள்.    பொதுவாக வருடங்கள் பல உருண்டோடும் போ\து எப்படி பட்ட பெரிய பிரச்சனையும் மறைந்து போய்விடும் என்பது நடைமுறை உண்மை. ஆனால் 50 வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவம், மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது என்றால் அதை நம்புவது கொஞ்சம் சிரமம் தான். 2002 ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டி நடைபெறும் நாடுகளாக ஜப்பானும் தென் கொரியாவும் இருந்தது. இந்த இரண்டு நாடுகளும் இணைந்து அந்த போட்டிகளை நடத்தின ஜப்பானும் தென்கொரியாவும், இந்தியா பாகிஸ்தான் போல. உள்ளுக்குள் பகையை வைத்துக்கொண்டு வெளியே நட்பை பாராட்டி கொள்ளும் நாடுகள்.    போட்டிக்கான முன் ஏற்பாடுகள் இரு நாடுகளிலும் மிகவும் வேகமாக நடந்து கொண்டிருந்த போது, தென் கோரிய தொலைக்காட்சி ஓன்று விபரீதமான் பேட்டி ஒன்றை ஒளிபரப்பியது. அந்த பேட்டி கிட்டதட்ட 50 வருட அம...

மது பானங்கள் ஐஸ் கட்டியாக உறைவதில்லை ஏன் தெரியுமா ?

Image
பீர், ஒய்ன், பிராந்தி, விஸ்கி, உள்ளிட்ட போதை சமாச்சாரங்களை எவ்வளவு தான் குளிர்வித்தாலும் அவை உறைந்து போகாமல், நீர்ம நிலையிலேயே இருப்பதை கண்டு மது பிரியர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு இருப்பார்கள். மது பானங்கள் உறைந்து ஐஸ் கட்டியாக மாறினால், அதில் ஒரு குச்சியை சொருகி ஜாலியாக சப்பி சாப்பிடலாம். ஆனால் அவை ஏனோ உறைவதில்லை என்ற கவலை கூட சில மது பிரியர்களுக்கு உண்டு. மது பழக்கம் அறவே இல்லாத நீங்கள் கூட மது பானங்கள உறையாமல் இருக்க காரணத்தை அறிய ஆர்வமாக இருப்பீர்கள்.    உண்மையில் மது பானங்களை உறைய வைக்கவே முடியாதா என்றால் நிச்சயமாக முடியும். ஆனால் அவற்றை நம் வீடுகளிலும் கடைகளிலும் இருக்கும் சாதாரண குளிர்சாதன பெட்டிகளை கொண்டு உறைய வைக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு வகை மது பானமும் ஓர் உரை நிலையை கொண்டுள்ளது. அதாவது ஒரு மது பானத்தில் கலந்திருக்கும் எத்தனால் அல்லது எதின் ஆல்ககால் வேதியல் சேர்மத்தின் அளவை பொறுத்து உரை நிலை மாறுபடுகிறது. சுத்தமான எத்தனாலை உறை நிலைக்கு கொண்டு வரவேண்டுமானால், அதனை -114 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவிற்கு குளிர்விக்க வேண்டும்.    ஆனால் நாம் ...

தமிழ் ஓலை சுவடிகளை சேகரித்த ஆங்கிலேயர்

Image
ஆங்கிலேயர்களில் சிலர் தமிழ் மொழி மீது வைத்து இருந்த பற்று நம்மை பிரமிக்க வைக்கிறது. தமிழ் ஓலை சுவடிகளை ஊர் ஊராக சென்று, தனது சொத்தை விற்று சேகரித்த அந்த ஆங்கிலேயரின் பெயர் ப்ரான்சிஸ் ஒயிட் எல்லிஸ். தமிழகத்தின் பெரு நகரங்களில் K.K.நகர், அண்ணா நகர் போல எல்லிஸ் நகரும் இருக்கும். அதுவும் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் உருவாக்கிய குடியிருப்புகளுக்கு இந்த பெயரை வைத்து இருப்பார்கள். வைத்தவர் அன்றைய முதல்வர் M.G.R.    எல்லிஸ் என்ற பெயரில் திரைப்பட இயக்குனர் ஒருவர் இருந்தார். சகுந்தலை போன்ற படங்களை இயக்கியவர் எல்லிஸ் ஆர் டங்கன் தான். அவரது பெயரில் தான் இந்த நகரங்கள் அமைந்து இருகின்றன என்பது தான் பலரின் எண்ணம். அந்த அளவுக்கு இந்த அறிஞரை யாருக்கும் தெரியாது. இங்கிலாந்தில் பிறந்த ப்ரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் ஒரு ஆங்கிலேயர். சிறு வயதில் இருந்தே புத்திசாலியாக விளங்கி வந்தார். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய் துறை செயலாளராக சென்னைக்கு வந்தார். 8 ஆண்டுகள் அந்த வேலையை செய்தார். அதன் பின் சென்னை ஆட்சியராக பதவி உயர்வு பெற்று பத்து ஆண்டுகள் பணியாற்றினா...

கண்களை தானம் செய்யுங்கள்

Image
தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பேர் பார்வையின்றி தவித்து வருகின்றனர். மக்களிடம் இருக்கும் தவறான நம்பிக்கையின் காரணமாக பலரும் கண் தானம் செய்ய தயங்குவதால் ஆண்டுக்கு சராசரியாக 6 ஆயிரம் கண்கள் மட்டுமே தானமாக கிடைக்கின்றன. தமிழகத்தில் சாலை மற்றும் ரெயில் விபத்துகளில் சிக்கியும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டும், தற்கொலை செய்து கொண்டும். தினமும் பலர் இறகின்றனர். இவ்வாறு ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இறக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேர் இறகின்றனர். இவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே கண்களை தானமாக தருகின்றனர். தமிழகத்தில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை, மத்திய மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. கண்களை தானம் செய்ய, பொது மக்கள் பலரும் முன்வருவது இல்லை. தமிழகத்தில் தானமாக கிடைக்கும் அத்தனை கண்களையும் பயன்படுத்த முடிவதும் இல்லை. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 4 ஆயிரம் கண்களை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. ஒருவர் இறந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் க...

தங்கத்தை உருவாக்கும் பாக்டிரியா

Image
தங்கம் என்றாலே சுரங்கம் போன்ற இடங்களில் இருந்து தான் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான். ஆனால், ஒருவகையான பாக்டிரியாவில் இருந்து கூட தங்கத்தை எடுக்க முடியும் என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர் லிட்சிகின் மாநில பல்கலைகழகத்தின் ஆய்வாளர்கள்.    கப்ரியவிடாஸ் மெட்டாலி டுரசியன் என்று அழைக்க கூடிய பாக்டிரியா தான் தங்கத்தை கொடுக்கிறது. விஷத்தை தங்கமாக மாற்றும் ஒரு முயற்சி தான் இது. தங்க அயனிகள் தண்ணீரில் கரையும் பொது பாக்டிரியா விஷமாக மாறி விடுகிறது. இதில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள டெல்சின் பாக்டி A என்ற புரதத்தை உருவாக்குகிறது. இது ஒரு கவசமாக செயல்பட்டு பாதிப்பு இல்லாத தங்க துகள்களாக மாற்றி தனது செல்களின் வெளியே குவித்து விடுகிறது.    இது குறித்த ஆராய்ச்சிக்காக கசன் காசபி மற்றும் ஆடம் ப்ரௌன் என்ற ஆராய்ச்சியாளர்கள் தனி பரிசோதனை கூடத்தை உருவாக்கி இருக்கிறார்கள். காசபி கூறுகையில் கோல்ட் க்ளோரைட் வாங்க பணம் செலவு ஆகும் என்றாலும், ஒன்றுக்கும் உதவாத அதிலிருந்து தங்கத்தை உருவாக்குகிறது இந்த பாக்டிரியா.     பரிசோதனை கூடத்தில் இந்த பாக்டிர...

பீனிக்ஸ் பறவை நெருப்பின் சாம்பலில் இருந்து உருவாகிறதா ?

Image
சாம்பலில் இருந்து புகை, தூசி, துகள்கள் தான் எழும் என நாம் நினைத்து கொண்டிருந்தால், ஒரு சிலர் பீனிக்ஸ் பறவையும் சாம்பலில் இருந்து தான் எழுகிறது என்கிறார்கள். பீனிக்ஸ் என்றால் என்ன, பீனிக்ஸ் பறவை என்பது நிஜமான பறவையா, பீனிக்ஸ் பறவை எப்படி இருக்கும். பீனிக்ஸ் பறவை சாம்பலுடன் எவ்வாறு சம்பந்தம் கொண்டுள்ளது. என்பன போன்ற தகவல்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.    பீனிக்ஸ் பறவை என்பது பண்டைய எகிப்தியர்களின் காலம் தொட்டே புராண கதைகளில் கூறப்படும் ஒரு உயிரினம் ஆகும். பண்டைய கிரேக்க, ரோமானிய, அரேபிய, கிருஸ்துவ மற்றும் சீன புராண கதைகளிலும் கூட பீனிக்ஸ் பறவைகளின் பற்றிய குறிப்புகள் உள்ளன. பீனிக்ஸ் பறவைக்கு அழிவே இல்லை என கூறபடுவது போலவே. பீனிக்ஸ் பறவை பற்றிய புராண கதைகளும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து இன்னுமும் அழியாமல் உள்ளது.    பீனிக்ஸ் பறவையின் தோற்றம் பற்றிய தகவல்கள், காலத்திற்கு ஏற்ப மாறுபடுபவையாக உள்ளன. ஒரு தரப்பினர் பீனிக்ஸ் பறவையானது, கழுகை போன்ற இருக்கும் என்கிறார்கள். வேறு தரப்பினர் பீனிக்ஸ் பறவையின் தோற்றத்தை பருந்து, கொக்கு, மற்றும் நெருப்பு கோழி ஆகியவற்று...

3 ஆக பிரிக்கப்பட்ட உலக நாடுகள்

Image
தொலைக்காட்சி, செய்தி தாள், உள்ளிட்ட ஊடகங்களில் மூன்றாம் உலக நாடுகள் என்று சொல்லபடுவதை நாம் கேட்டு இருப்போம். அப்படி என்றால் முதலாம் உலக நாடுகள் மற்றும் இரண்டாம் உலக நாடுகள் என்பவை யாவை, ஏன் அவ்வாறு கூறுகின்றனர். உலக நாடுகள் ஏன் ஓன்று இரண்டு மூன்று என பிரிக்கப்பட்டுள்ளது என்று தெர்யுமா?    முதலாம் நாடுகள் என்பவை அமெரிக்க மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் நிலவிய பனிப்போர் காலகட்டத்தில் 1949 ம் ஆண்டில் ஏப்ரல் 4ம் நாள் அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் இணைந்து உருவாக்கிய North Atlantic Treaty  Organization எனபடும் வட அட்லாண்டிக் ஒப்பந்தத்தில் உறுபினராக இருக்கும் நாடுகளாகும். இவை சுருக்கமாக NATO நாடுகள் எனவும் அழைக்கபடுகின்றனர்.    NATO அமைப்பில் வட அமேரிக்கா தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்பட 29 நாடுகள் உறுபினர்களாக உள்ளனர். போர் என வந்தால் இவை அனைத்து நாடுகளும் ஓன்று இணைந்து எதிரியை துவம்சம் செய்ய தயாராகிவிடும். இவையே முதலாம் உலக நாடுகள் என அழைக்கப்படுகின்றனர்.    இரண்டாம் உலக நாடுகள் என்பவை WARSAW PACT  COU...

எலும்பை வைத்து பாலினம் கண்டறிவது எப்படி

Image
போலிசாரால் மீட்கப்படும் ஓர் எழுப்பு கூட்டின் பாலினம் ஆணா அல்லது பெண்ணா என்பதை எழுப்பு கூட்டின் மண்டை ஓடு மற்றும் இடுப்பு எலும்பை ஆய்வு செய்வதன் மூலமாக தடையவியல் வல்லுனர்கள் தீர்மானிக்கிறார்கள்.    குறிப்பாக வெறும் மண்டை ஓட்டை மட்டுமே கொண்டு இறந்தவரின் பாலினத்தை கண்டறிய முடியம். இதற்கு மண்டை ஓட்டில் காணப்படும் பல்வேறு முக்கிய அம்சங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளபடுகின்றன. அதன் பிறகே மண்டை ஓட்டின் பாலினத்தை தடயவியல் வல்லுனர்கள் தீர்மானிகின்றார்கள்.    பொதுவாக பெண்ணின் மண்டை ஓட்டை ஒப்பிடுகையில் ஆணின் மண்டை ஓட்டில் பல மாறுபட்ட அம்சங்கள் காணபடுகின்றன. இவையே இறந்த ஒருவரின் மண்டை மட்டுமே வைத்து அவரின் பாலினத்தை கண்டுபிடிக்க தடயவியல் வல்லுனர்களுக்கு உதவுகின்றன. பொதுவாக பெண்ணின் மண்ணை ஓட்டை காட்டிலும். ஆணின் மண்டை ஓடு கனமானதாக இருக்கும். மற்றும் எலும்பு மிகவும் அடர்த்தியானதாக இருக்கும். பெண்ணின் மண்டை ஓட்டை காட்டிலும். ஆணின் மண்டை ஓட்டில் தசை இணைப்பு பகுதிகள் அதிகமாக இருக்கும்.    மேலும் நெற்றி, கண்கள், தாடை ஆகியவற்றிலும் ஆண் மற்றும் பெண் மண்டை ஓட...

காவல் துறையினர் ஏன் குதிரை ரோந்து செல்வதை இன்றும் நிறுத்தவில்லை

Image
ஒவ்வொரு நாடும் அதன் போலிஸ் படையை நவீனமாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு காலத்தில் போலிசாரிடம் ஒரே ஒரு கை துப்பாக்கி மட்டுமே அதிகபட்ச ஆயுதமாக இருந்து வந்த நிலையில். இன்று நவீன ஆயுதங்கள், உபகரணங்கள், வாகனங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்துதரபட்டு போலீஸ் படையினர் தங்கள் பணியினை சிறப்பாக செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.    இருந்தாலும் பல நாடுகள், அது வளரும் நாடுகளாக இருந்தாலும் சரி அல்லது வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும் சரி, சட்ட அமலாக்கத்தின் மிக பழமையான முறைகளில் ஒன்றை இன்றும் நடைமுறை படுத்தி வருகின்றனர். அது தான் குதிரை மீது சவாரி செய்து போலிஸார் செய்யும் ரோந்து பணியாகும். சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட இந்திய மாநகரங்களிலும், நியுயார்க், பெர்லின், லண்டன் உள்ளிட்ட அயல் நாடுகளின் பெரு நகரங்களிலும் போலிஸார் குதிரை மீது அமர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவதை நாம் செய்திகளில் பலமுறை பார்த்திருக்கிறோம்.    இன்று பலவித நவீன வாகனங்கள் வந்துவிட்ட போதிலும், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் ரோந்து செல்ல, போலிஸார் ஏன் குதிர...

கீழே கிடந்த மொபைல் போன்களை எடுத்து பயன்படுத்த கூடாது ஏன்?

Image
பலருக்கும் சில சந்தர்பங்களில் அனாமதைய SMART PHONEகள் கிடைக்கும். அதாவது, யாரோ ஒருவர் தவறவிட்டு சென்ற SMART PHONE சாலையோரமாகவோ அல்லது பிற இடங்களிலோ கிடந்தால் அதை மற்றொருவர் அடித்தது யோகம் என நினைத்து யாருக்கும் தெரியாமல் எடுத்து கொண்டு வீடு வந்து சேர்ந்து விடுவார். அல்லது முன்பின் அறியாத ஒருவர் 20,000 மதிப்பு உள்ள SMART PHONE 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்றால், வாங்குபவர் விற்பவரை ஏளனமாக பார்த்துவிட்டு உடனடியாக அந்த SMART PHONE னை விலை கொடுத்து வாங்கி விடுவார். இவ்வாறான SMART PHONE கள் கிடைத்தவுடன் அனைவரும் செய்ய கூடிய ஒரே செயல் PHONE னை SWITCH OFF செய்து பழைய SIM கார்டு எடுத்துவிட்டு புதிய SIM CARD பொருத்தி கொண்டு பயன்படுத்த தொடங்குவார்கள்.    இத்தகைய SMART PHONE களை பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்றால், அது சொந்த செலவில் நமக்கு நாமே சூனியம் வைத்து கொள்வதற்கு சமம். இன்று பெரும்பாலான குற்றவாளிகள், காவல் துறையிடம் சிக்கிக்கொள்ள SMART PHONE களே காரணமாக இருகின்றன. பழைய SIM கார்டை எடுத்து விட்டு புதிய SIM கார்டு பொருத்தி பயன்படுத்தினாலும், அந்த போனின் IMEI நம்பரை வைத்து புதிய S...

ஸ்மார்ட் போன் பேட்டரிகளின் கட்டு கதைகள்

Image
மொபைல் போனை இரவு முழுவதும் சார்ஜில் போடக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால் பேட்டரி ஓவர் சார்ஜ் ஆன பிறகு அதன் வாழ்நாள் குறையும் அல்லது அதிக சூடாகி வெடித்துவிடும் எனவும் பலரும் கூறுவார்கள். குறிப்பாக புது மொபைல் போன்களை வாங்கும் போது கடைகாரர்களும் நண்பர்களும் இது போன்று கூறுவார்கள். சரி இதில் உண்மை இருக்கிறதா என்றால், ஒரு காலத்தில் ஒரு அளவுக்கு உண்மையாக தான் இருந்தது. அக்கால மொபைல் போன் பேட்டரிகள் பெரும்பாலும் நிக்கல் கேட்மியம் அல்லது நிக்கல் மெட்டல் ஹைட்ரேட் ஆகிய தனிமங்களை கொண்டு தான் தயாரிக்கபட்டன.    1. இம்மாதிரியான பேட்டரிகளை கொண்ட மொபைல் போன்களை ஓவர் சார்ஜ் செய்தால், அதாவது பேட்டரி சார்ஜ் 1௦௦ சதவிதத்தை தொட்டுவிட்ட பிறகும் தொடர்ந்து சார்ஜ் செய்யும் போது அதிக வெப்பம் அடைய துவங்கும். இதனால் பேட்டரியின் வாழ்நாள் குறைந்ததோடு மொபைல் போன் செயல் திறனிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் இன்றைய நவீன ஸ்மார்ட் போன்களில் லித்தியம் அயன் பேட்டரிகள் பொருத்தபடுகின்றன. இவை பழைய நிக்கல் அடிப்படையிலான பேட்டரிகளை காட்டிலும் செயல் திறனில் சிறப்பானவை. மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் நுகர்வோர் ...

அணு மின் நிலையம் அவசியம் தானா?

Image
அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவையா? இல்லை பாதுகாப்பற்றவையா என்ற பட்டிமன்றம் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் இதற்கான இறுதி முடிவை மட்டும் இருதரப்பாலும் இன்னமும் சரியாக சொல்ல முடியவில்லை என்பது தான் உண்மை.     அணுமின் நிலையத்தோடு தொடர்புடையவர்கள் அது பாதுகாப்பானது என்றும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் கூறுகிறார்கள். ஆனால் இயற்கையின் விளைவுகளை யாராலும் கணிக்கமுடியாது என்பதுதான் உண்மை. ஒரு சுனாமியோ அல்லது ஒரு பூகம்பமோ வந்தால் இவர்களால் என்ன செய்ய முடியும். என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள், எதிர்ப்பாளர்கள். இப்படி பட்டிமன்றம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.     ஆனால் இதற்கெல்லாம் கருத்து கணிப்பு மூலம் ஜப்பானிய மக்கள் தீர்வு சொல்லியிருக்கிறார்கள். ஜப்பான் இயற்கையால் சபிக்கப்பட்ட ஒரு தேசம். தீவுக்கூட்டமாக அமைந்திருக்கும் அந்த நாட்டுக்கு சுனாமி, பூகம்பம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் அழையா விருந்தாளி போல் ஓயாமல் வந்து போகும். அவர்களின் கட்டிடங்கள் கூட பூகம்பத்தை தாக்குப்பிடிக்கும் விதமாகத்தான் கட்டப்பட்டிருக்கும்.     சுனாமியால் உலக...

இனிப்பான ஆடைகள்

Image
பேஷன் உலகில் நடக்கும் விநோதங்களுக்கு அளவே இல்லை. சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சாக்லேட் விற்பயையை அதிகரிப்பதற்காக சாக்லேட் திருவிழா நடத்தப்பட்டது. 17-வது ஆண்டாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆரம்ப நிகழ்ச்சியாக பேஷன் ஷோ நடந்தது. இதில் அழகான பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.    சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு மாடல் அழகியான 29 வயது கேரின் பெரி அழைக்கப்பட்டிருந்தார். இவரது ஆடைகள் வெள்ளை, பிரவுன் நிற சாக்லேட் பார்கள், முந்திரி, பாதாம் மற்றும் பிலம் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.    முதலில் சாக்லேட் பார்களால் செய்யப்பட்டிருந்த ஸ்கர்ட் அணிந்து கேரின் பெரி மேடையில் தோன்றினார். பார்வையாளர்கள் மத்தியில் அவர் ஸ்டைலாக நடந்து வந்தார். அப்போது ஸ்கர்ட்டின் முன்பகுதியில் இருந்த 2 சாக்லெட் பார்கள் திடீரென கழன்று விழுந்தன. சற்றும் எதிர்பாராத கேரின் வெட்கத்தில் விலகிய பகுதியை கைகளால் மறைத்துக் கொண்டார்.    ஆனாலும் சாக்லேட் பார்களுக்கு கேரின் மீது என்ன கோபமோ தெரியவில்லை. தொடர்ந்து உடைந்து நொறுங்கிக் கொண்டே இருந்தன. சில...

RED EYE EFFECT பற்றி தெரியுமா?

Image
நாம் வெளிச்சம் குறைந்த மாலை வேளைகளில் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தில், நமது கண்களில் கருவிழியில் சிவப்பு நிற ஒளி தோன்றி அப்புகை படத்திற்கு ஒருவித அமானுஷ்ய தன்மையை கொடுக்கும். அவ்வாறு கண்களில் தோன்றும் சிவப்பு ஒளியை, RED EYE EFFECT என்கிறார்கள். இந்த RED EYE EFFECT ஆனது கேமராவின் பிளாஷ் ஒளி காரணமாக தோன்றுகிறது என பலருக்கும் தெரிந்தாலும், அது ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று பலரும் அறிவதில்லை.    பொதுவாக குறைவான வெளிச்ச சூழ்நிலையில் நமது கண்களின் பாவைகள் கூடுதல் வெளிச்சம் பெரும் பொருட்டு விரிவடைகின்றன. எனவே, குறைவான வெளிச்சத்தில் புகைப்படங்கள் எடுக்கும் போது கேமராவின் அதீத பிளாஷ் ஒளி நமது கண்களுக்குள் நுழைகிறது. அவ்வாறு நுழையும் அதீத ஒளியை கட்டுபடுத்த கண்களின் பாவைகள் சுருங்கி கொள்வதற்கு போதுமான அவகாசம் கிடைப்பது இல்லை. ஆகையால் கண்களுக்குள் நுழையும் அதிக ஒளியானது கண்களின் பின் பகுதியில் அமைந்திருக்கும் CHOROID LAYER எனப்படும் இணைப்பு திசுவின் அடுக்கில் மோதி பிரதிபலிகிறது. அப்படி பிரதிபலிக்கும் ஒளி சிவப்பாக தோன்ற COROID LAYER நிலவும் அதிக ரத்த ஓட்டமே காரணமாகிறத...

செல்பி என்ற சொல் எப்படி வந்தது என்று தெரியுமா?

Image
செல்போன்களில் தன்னைத் தானே "செல்பி" படம் எடுத்துக்கொள்வது இப்போது சாதரணமாகி விட்டது.. எளிதாக எடுத்து செல்லக்கூடிய "கோடாக் பிரவுனி" பெட்டிக் கேமரா அறிமுகமான போது, தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் முறை இருந்துள்ளது. அக்காலக் கட்டத்தில் பெண்மணி ஒருவர் நிலை கண்ணாடி உதவியுடன் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். 1900-ல் நடந்தது இது.     புகைப்பட வரலாற்றில், கண்ணாடி கேமராவின் துணையுடன் ரஷ்யாவின் "அண்டாசியா திகோவ் லேவ்ன" என்பவர் தனது 13 வது வயதில் புகைப்படம் எடுத்து, அதை ஒரு கடிதத்துடன் தோழிக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் அந்த புகைப்படத்தை கண்ணாடி பார்த்துக்கொண்டு தானாகவே எடுத்ததாகவும், அவ்வாறு எடுத்த போது தனது கைகள் நடுங்கியதாகவும் கூறியுள்ளார். இது 1914-ல் நடந்தது.    "Facebook" கலாச்சாரம் பரவுவதற்கு முன்பாகவே தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்ளுதல் அதிகமாக “மைஸ்பேஸ்” இணையதளத்தில் காணப்பட்டது. இது 2௦௦௦ ஆண்டுகளின் நிலைமை.    பின்னர் பிளிக்கர் தளத்தில் புகைப்படப் பகிர்வில் "செல்பி" என்ற வார்த்தை இடம...

விமானத்தில் WIFI எப்படி செயல்படுகிறது தெரியுமா ?

Image
இன்றைய நவீன யுகத்தில், இன்டர்நெட் வசதி இல்லாத இடங்களே இல்லை என்று கூறலாம். அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இடங்களில் WIFI தொழில்நுட்பம் மூலமாக இன்டர்நெட் வசதியை பெற்று நாம் இணையத்தோடு இந்து இருக்க முடிகிறது. இந்த இடங்களில் இணைக்கப்பட்டு இருக்கும் ரொவ்டர் ஆனது INTERNET SERVICE PROVIDER எனப்படும், இணைய சேவை வழங்குனரோடு WIRE மூலமாக நேரடியாக தொடர்பு கொண்டு இன்டர்நெட் வசதியை பெறுகிறது. பின்னர் ரொவ்டரில் இருக்கும் ஆண்டனா மூலமாக எலெக்ட்ரோ மேக்னடிக் கதிர்களை உமிழ்ந்து கம்பி இல்லா தொடர்பு மூலமாக நாம் இணையத்தோடு இணைந்து இருக்க முடிகிறது.    ஆனால் பறக்கும் ஒரு விமானத்தில் WIFI எப்படி வேலை செய்கிறது. 35,000 அடி உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்தை இணைய சேவை வழங்குனரோடு நேரடி கம்பி தொடர்பு மூலமாக இணைப்பது சாத்தியம் இல்லை. எனவே கம்பி இல்லா தொடர்பு மூலம் இணைக்கபட வேண்டும். அதனை எவ்வாறு சாத்தியம் செய்து, விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இன்டர்நெட் சேவையை பெற்று தருகிறார்கள் என்று தெரியுமா?    35,000 அடி உயரத்த...

All India Radio வரலாறு

Image
இந்தியாவின் மூத்த வானொலி ஒலிபரப்பு இரண்டு தனியார் வானொலி நிலையங்களுடன் தொடங்கியது. மும்பையிலும், கொல்கத்தாவிலும் இந்த சேவை 1927-ல் தொடங்கப்பட்டது. 1930 முதல் அதை அரசு ஏற்றது. இந்தியன் “பிராட்காஸ்டிங் சர்வீஸ்” என்ற பெயரில் ஒளிபரப்பை தொடங்கியது. அது தான் 1936-க்கு பின் “ஆள் இந்தியா ரேடியோ” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதையும் 1957-ல் “ஆகாசவாணி” என்று பெயர் மாற்றி விட்டனர்.    இந்தியாவின் முதல் செய்தி ஒலிபரப்பு 1927-ல் ஜூலை 23-ல் மும்பை தனியார் நிலையத்தில் இருந்து ஒளிபரப்பானது. ஆள் இந்திய ரேடியோவின் முதல் செய்தி ஒலிபரப்பு 1937 ஆகஸ்டில் தொடங்கியது. “ஆள் இந்தியா ரேடியோ” அயல் நாட்டுகளுக்கான ஒளிபரப்பையும் செய்து வருகிறது. மொத்தம் 24 மொழிகளில் ஒலிபரப்பு செய்யபடுகிறது. அவற்றில் 8 இந்திய மொழிகள். இதுபோக ஆங்கிலம் மற்றும் 15 அயல் நாட்டு மொழிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.    இதேபோல் இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பான தூர்தர்சன், உலகின் மிகப்பெரிய ஒலிபரப்பு அமைப்புகளில் ஓன்று. இது சுமார் 984 டெரிஸ்டரியல் டிரான்ஸ்மீட்டர்கள் வழியாக இந்தியாவின்...

உடலில் ஏற்படும் கட்டிகளுக்கான காரணம் மற்றும் தீர்வு

Image
சர்க்கரை நோயாளிகள், சுகாதாரமற்ற இடத்தில் வசிப்பவர்கள், உணவு கட்டுப்பாடு இல்லாதவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள், அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகுபவர்கள் மற்றும் புகைப் பிடிப்பவர்களுக்கு அடிக்கடி கட்டிகள் உண்டாகின்றன. லேசான விக்கமாக ஆரம்பித்து அதில் தடிப்பு, வலி, எரிச்சசல் ஆகியன தோன்றி பின் கட்டியாக மாறுகிறது.    இது போன்று தோலில் சதை கட்டிகள் வளர்ந்து அது உடைவதற்கு பல நாட்களாகிறது. அது வரை வலி காய்ச்சல், நெறிகட்டுதல் போன்ற பல தொல்லைகளால் பாதிப்பு ஏற்படுவதால், கட்டிகளை உடனே உடைத்து குணமடைய நோய் எதிர்ப்பு தன்மையுள்ள மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கட்டியில் தோன்றும் சீழ் பிற இடங்களில் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு.    இவ்வாறு தோலில் தோன்றும் கட்டிகள் நாளுக்கு நாள் பெரியாகி கடும் வேதனையை உண்டாக்குவதுடன் குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், சீழ் கோர்த்து உடைகின்றன. கட்டிகள் முற்ற ஆரம்பித்ததும் அவற்றை மருத்துவரின் மேற்பார்வையில் கீறி, புண்களை ஆற்ற வேண்டும், இல்லாவிட்டால் உறுப்புகள் அழுகிப் போக ஆரம்பித்துவிடும். சாதாரன கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே பலுக்கச் செய்து...

ATM ல் அட்டையில் பொருத்தப்பட்டுள்ள EMV CHIP பற்றி தெரியுமா?

Image
ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை, துணி கடைகள், நகை கடைகள், மால்கள், சூப்பர் மார்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்த வேண்டி நமது டெபிட் அல்லது க்ரிடிட் கார்ட்கள் கொடுக்கும்போது, அதனை அவர்கள் PAYMENT TERMINAL எனப்படும் ஒரு சாதனத்தின் பக்கவாட்டில் SWIP செய்து பணப்பரிமாற்றம் செய்து கொள்வார்கள். ஆனால் இன்று கார்டுகளை SWIP செய்வதற்கு பதிலாக PAYMENT TERMINAL முகப்பில் இருக்கும் ஒரு ஸ்லாட்டில் நுழைகிறார்கள். சில வினாடிகள் கார்டு பரிசோதனை செய்யப்பட்டு தேவையான பணம் நமது வங்கி கணக்கில் இருந்து அவர்களது வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யபடுகிறது. PAYMENT TERMINAL சாதனத்தில் முன்பு SWIP செய்யப்பட்ட டெபிட் மற்றும் க்ரிடிட் கார்ட்கள் இன்று உள்நுளைப்பதற்கு என்ன காரணம் என்பதற்கு கார்களில் பொருத்தப்பட்டுள்ள EMV சிப் தொழில்நுட்பம் ஆகும். SBI உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிகையளர்களுக்கு EMV சிப் பதிக்கப்பட்ட ATM கார்டுகளை அறிமுகம் படுத்திவருகின்றன.    EMV சிப் தொழில்நுட்பம் என்பது EUROPAY, MASTERCARD மற்றும் VISA ஆகிய வங்கி அட்டை உ...

ரோமானிய பெண்களின் வியக்க வைக்கும் பண்டைய கால வாழ்க்கை முறை

Image
பண்டைய கால ரோமர்கள், வீரம், கலை, அழகு என அனைத்து வகையிலும் சிறந்து காணப்பட்டனர். இன்று வரையிலும் அவர்களது பண்டைய காலத்து கட்டிட கலை உலகம் மெட்சும் வகையில் வரலாற்றில் சிறப்பு மிக்க கம்பிரத்துடன் திகழ்ந்து வருகின்றது ஆனால், இவர்கள் தங்கள் மகள், மனைவியரை எப்படி நடத்தி வந்தனர் என்று பெரிதும் யாரும் அறியாத ஓன்று பண்டைய காலத்து ரோமாபுரி பெண்கள் மிகவும் அழகாக இருந்தனர். வசதியுடன் இருந்தனர். என்பதை எல்லாம் வரலாற்று குறிப்புகள் மூலம் அறிய முடியும். ஆனால் அவர்களும் கூண்டு கிளியாக தான் தங்கள் வாழ்நாளை கழித்துள்ளனர்.      பண்டைய காலத்து ரோமாபுரி பெண்கள் உடற் பயிற்சியில் ஈடுபடும் போது மார்பக பகுதியில் பிளாஸ்திரி போன்ற ஒன்றை சுற்றி கொள்வார்கள். அந்த காலத்தில் Bra கண்டுபிடிக்க வில்லை என்ற காரணத்தால், இப்படி ஒரு முறையை கடைப்பிடித்து வந்ததாக அறியபடுகிறது. பண்டைய கால ரோமா புரியில் வாழ்ந்து வந்த பணக்கார பெண்கள் தங்கள் சொந்த குழந்தைகளுக்கே தாய்பால் கொடுக்க மாட்டார்கள். அதற்கு மாறாக வெட்நெஸ் எனப்படும், பாலுட்டும் தாதி பெண்களிடம் கொடுத்து விடுவார்கள் அல்லது இதற்காகவே பணியமர்த்தப்பட்ட...