தாவரங்களுடன் பேசுங்க

தாவரங்கள் நன்றாக வளர என்ன செய்ய வேண்டும்?
'தண்ணீர் பாய்ச்ச வேண்டும். முறையாக உரமிட வேண்டும்' என்கிறீர்களா?
இதெல்லாம் பொதுவான முறைகள். தாவரங்களுடன் மனம்விட்டுப் பேசினால் அவை நன்றாக
வளரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தாவரங்களுடன் பேசுவதா? அவற்றுக்கென்ன நாம்
பேசுவது புரியுமா என்ன என்று கேள்வி எழுப்புகிறீர்களா? 'தாவரங்களுக்கு மொழி
புரியாதுதான். ஆனால் அவை உங்களின் உச்சரிப்பைப் புரிந்து கொள்ளும்
என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இது தொடர்பான புதுமையான ஆய்வை இங்கிலாந்து
விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அதன் முடிவில்தான், தாவரங்கள் மனிதர்கள்
தம்மிடம் பேசுவதை விரும்புகின்றன என்று அறிவித்துள்ளனர்.
அதிலும் இங்கிலாந்தின் நியுகேசில் பகுதியில்
புழங்கும் உச்சரிப்பு முறையைத் தாவரங்கள் அதிகம் ரசிக்கின்றனவாம். எசக்ஸ்,
வேல்ஸ் பகுதி உச்சரிப்பு முறைகளும் பலன் கொடுக்கின்றன என்று
தெரிவிக்கப்படுகிறது.
எசக்ஸ் பகுதி செடி, கொடிகள் விற்பனை மையம்
ஒன்றில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏனோ தெரியவில்லை, மேல்தட்டு
மக்களின் உச்சரிப்பு முறையை தாவரங்கள் ரசிக்கவில்லையாம்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 1986-ம்
ஆண்டில் தனது தோட்டத்துத் தாவரங்களுடன் பேசுவது பிடிக்கும் என்றபோது பலரும்
அவரைக் கிண்டலடித்தார்கள். அவர்கள் தற்போது என்ன சொல்வார்கள் என்று
தெரியவில்லை!
Comments
Post a Comment